திருகோணமலையில் இரு கடைகள் உடைக்கப்பட்டு பாரிய திருட்டு சம்பவம்

திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவில் ஒரு வாரத்திற்குள் இரண்டு கடைகள் உடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது திருட்டுச் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இச்சம்பவம் இன்று (01) அதிகாலை இடம் பெற்றுள்ளது.
மொரவெவ- மஹதிவுல்வெவ பகுதியில் பாரிய சில்லறை கடைகள் இரண்டு உடைக்கப்பட்டு பணம், பிஸ்கட், சிகரெட் மற்றும் ஏனைய முக்கிய பொருட்கள் திருடப்பட்டுள்ளதுடன் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவின் முக்கிய பாகங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெட்டி உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மொரவெவ-பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 12 times, 1 visits today)