உலகம்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 90 வயது மூதாட்டி

ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஆயிரக்கணக்கிலான மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஜப்பான் ராணுவம் உணவு, குடிநீர், போர்வைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கிவருகிறது.

இந்த நிலையில் நேற்று மீட்புப் பணியாளர்கள் இஷிவாகா மாகாணம் சுஸு நகரில் இரண்டு மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 90 வயது மூதாட்டியை உயிருடன் மீட்டனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கிடையே உணவின்றி ஐந்து நாட்களுக்கும் மேலாக அந்த மூதாட்டி உயிருடன் இருந்தது மீட்புபடையினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இடிபாடுகளுக்கு இடையே கொட்டும் பனியில் சிக்கியவர்கள் 72 மணி நேரத்திற்குப் பிறகு உயிர் பிழைப்பது மிகவும் கடினம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், 124 மணி நேரத்திற்குப் பிறகு 90 வயது மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டுள்ளது அங்கிருந்தவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!