இந்தியா

திருமண விழாவுக்கு சென்ற இடத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட 6 வயது சிறுமி!

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் ஆறு வயது சிறுமி தனது பெற்றோருடன் நேற்று திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார். விழா முடிந்து இரவு வீடு திரும்பிய போது, சிறுமியின் உடையில் ரத்தக்கறை இருந்ததை அவரது பெற்றோர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள், பொலிஸில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் தௌசாவில் உள்ள மகிளா தானாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Minor Girl Raped by Father And Brother, Molested by Grandfather And Uncle  Over 5 Years: Pune Police

சிறுமி தற்போது தௌசாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுகுறித்து பொலிஸார் இன்று கூறுகையில், ” தௌசா மாவட்டத்தில் ஆறு வயது சிறுமி அடையாளம் தெரியாதவரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ராஜஸ்தான் பாஜக தலைவர் ராஜேந்திர ரத்தோர் கூறுகையில்,” இந்த வழக்கில் விரைவான விசாரணையை உறுதி செய்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வோம். சிறுமி தற்போது ICUவில் அனுமதிக்கப்பட்டு மெல்ல, மெல்ல சுயநினைவுக்கு வருகிறார்” என்றார்.

திருமண நிகழ்ச்சியில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்ப்டட சம்பவம், ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!