விளையாட்டு

வித்தியாசமான முறையில் அவுட் ஆன முஷ்பிகுர் ரஹீம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேசம் அணி 66.2 ஓவரில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்கள் எடுத்தார்.

இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முஷ்பிகுர் ரஹீம் தேவையில்லாமல் அவுட் ஆனார்.

அவர் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேமிசன் பந்து வீச்சை எதிர் கொண்டார். அப்போது தடுப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ரஹீம், பேட்டில் பட்டு பந்து அவரை விட்டு தள்ளி சென்றது. உடனே அந்த பந்தை கையால் தள்ளி விட்டார்.

இதை பார்த்த நியூசிலாந்து வீரர்கள் அவுட் என அப்பீல் செய்தனர். உடனே நடுவர்கள் 3-ம் நடுவரிடம் முறையீட்டார். இதனையடுத்து 3-ம் நடுவர் அவுட் என அறிவித்தார்.

இதன் மூலம் obstructing the field முறையில் அவுட் ஆன முதல் வங்காளதேசம் வீரர் என்ற மோசமாக சாதனை படைத்தார்.

(Visited 15 times, 1 visits today)

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ