Skip to content
August 19, 2025
Breaking News
Follow Us
இலங்கை செய்தி

இஸ்ரேலில் உயிரிழந்த சுஜித் பண்டார!!! இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை

இஸ்ரேலில் உயிரிழந்த சுஜித் பண்டாரவிற்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து நட்டஈடுகளையும் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும், அவரது உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அவசரமாக நடவடிக்கை எடுப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவர் காணாமல் போயிருந்தார். இஸ்ரேலில் செவிலியராகப் பணிபுரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர் ஹமாஸ் தீவிரவாதிகளின் பணயக்கைதியாக இருக்கலாம் என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்துக்கு கடந்த 31ம் திகதி தகவல் கிடைத்தது.

அதன் பின்னர், சுஜித் பண்டார மரணமடைந்ததை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார உறுதிப்படுத்தினார்.

வென்னப்புவ – கொலிஞ்சாடிய பிரதேசத்தில் வசித்து வந்த இவர், இறக்கும் போது 48 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை