சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்குவதற்கு அனுமதி இல்லை என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவளிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் மோதல்களுக்கு மத்தியில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
(Visited 11 times, 1 visits today)