ஐரோப்பா

பிரஸ்ஸல்ஸ் தாக்குதலாளியின் புகலிட கோரிக்கையை நிராகரித்த ஐரோப்பிய நாடுகள்

பிரஸ்ஸல்ஸில் இந்த வாரம் இரண்டு ஸ்வீடன் கால்பந்து இரசிகர்களை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி நான்கு ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் பெற முயன்று தோல்வியடைந்த ஒருவர் என பெல்ஜிய அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

சந்தேகநபர் 45 வயதான துனிசிய நாட்டைச் சேர்ந்த அப்தெசலேம் லஸ்ஸூட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் இஸ்லாமிய அரசு குழுவின் பெயரில் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கடந்த திங்கட்கிழமை பிரஸ்ஸல்ஸில் தாக்குதல் நடத்தியவர் நான்கு வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரியிருந்தார்.

ஒவ்வொரு முறையும் அவர் பாதுகாப்பிற்கு தகுதி பெறாததால் நிராகரிக்கப்பட்டார்” என்று பெல்ஜிய குடிவரவு அமைச்சர் நிக்கோல் டி மூர் கூறியுள்ளார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!