October 28, 2025
Breaking News
Follow Us
இலங்கை

வவுனியாவில் கோர விபத்து : பொலிஸ் விசேட அதிரடி படயினர் இருவர் உயிரிழப்பு!

வவுனியா, வெளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் அங்கு பயணித்த 5 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (09.10) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மழையின் போது பொலிஸ் விசேட அதிரடிப்படை ஜீப் ஒன்று வீதியில் சென்ற கறவை மாடு ஒன்றின் மீது மோதியதில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, மடுகந்தவில் அமைந்துள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த இரண்டு இராணுவத்தினரே உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் குருநாகல் மற்றும் மதவாச்சி பிரதேசங்களைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடையவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

காயமடைந்த இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும்  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்