இலங்கை

மட்டக்களப்பில் சுமன ரத்ன தேரர் தலைமையில் போராட்டம் : ஜனாதிபதிக்கு எதிராக அநாகரிகமான வார்த்தை பிரயோகம்

மட்டக்களப்பு நகரில் மயிலத்தமடு பகுதியில் காணி அபகரிப்புகளை முன்னெடுத்துள்ள சிங்களவர்கள் அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஜனாதிபதிக்கு எதிராகவும் பொலிஸாருக்கு எதிராகவும் அநாகரிகமான வார்த்தை பிரயோகத்தினை பயன்படுத்தி பேசியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் புனித மைக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி கலந்துகொண்ட போது அவரை சந்திப்பதற்கு ஊர்வலமாக சென்று பாடசாலைக்கு செல்லும் வழியில் பொலிஸார் வழிமறித்து செல்ல தடைவிதித்த நிலையில் பொலிஸாருக்கும் அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் பொலிஸாருக்கு எதிராக கடுமையான விமர்சித்தார்.

இதன்போது கைகளில் தும்புத்தடிகளையும் ஈக்கு தடிகளையும் வைத்துக்கொண்டு பொலிஸாருக்கும் ஜனாதிபதிக்கும் எதிரான கடுமையாக பேசியதுடன் சாணக்கியனுக்கு எதிராகவும் கடுமையான வார்த்தைகளினால் பேசியதாக தெரிக்கப்படுகின்றது

மதியம் 11.00மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5.30மணி வரையில் நடைபெற்றது.


இதன்போது அம்பிட்டிய சுமனரத்ன தேரரினால் செய்தி சேகரித்திக்கொண்டிருந்த பெண் ஊடகவியலாளர் ஒருவரும் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் இங்கு பதிவாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.


இன்றைய தினம் குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் கலகம் அடக்கும் பிரிவினர் தயார் நிலையில் வைத்திருந்ததுடன் பிக்குகள் புனித மைக்கேல் கல்லுரிக்கு அருகில் நின்று சுமார் மூன்று மணித்தியாலத்திற்கு மேலாக இடையூறுகளை ஏற்படுத்தியபோதிலும் அவர்களை அகற்றுவதற்கு எந்தநடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது,

See also  இலங்கை: தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை! வினாத்தாள் கசிவு தொடர்பாக அரசாங்கத்தின் புதிய முடிவு

(Visited 9 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content