இலங்கை

ஹரக் கட்டா தப்பிச்செல்ல முயற்சி: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

போதைப்பொருள் கடத்தல் காரரும் பாதாள உலகக்குழு உறுப்பினருமான ‘ஹரக் கட்டா’ தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவத்தில் தலைமறைவாகியுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு உதவி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர்.

அதன்படி, குறித்த இருவரும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

மேலும், சந்தேகநபர்களுடன் மோட்டார் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹரக்கட்டா எனப்படும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நதுன் சிந்தக கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் உதவியுடன் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 1 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content