இலங்கை

இலங்கையில் பயணப்பைக்குள் மீட்கப்பட்ட சடலம் – பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்கள்

சீதுவ, தண்டுகம் ஓயா பகுதியில் கடந்த வியாழக்கிழமை பயணப்பை ஒன்றுக்குள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்ட நிலையில் சடலம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் குறித்த நபர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பாக பிறிதொரு பிரதேசத்தில் வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு, பின்னர் பயணப்பைக்குள் இடப்பட்டு குறித்த பகுதியில் போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்லானவத்தை, கிந்திகொட பிரதேசத்தின் தண்டுகம் ஓயாவின் கரையோரப் பகுதியில் பயணப்பொதி ஒன்றுக்குள் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக 119 எனும் பொலிஸ் அவசர தொலைப்பேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட ஒருவர் என்பதுடன் 05 அடி 08 அங்குல உயரமும், சராசரியான உடலும், 02 அங்குல நீளமான முடியும் கொண்ட ஆண் என பொலிஸார் தெரிவித்தனர். அவர் சிவப்பு சட்டை மற்றும் பழுப்பு நிற காற்சட்டை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவரின் கழுத்தில் வலப்புறம் 7 நட்சத்திர அடையாளங்களுடன் பச்சை குத்தப்பட்டிருந்தமையும் தலை மற்றும் கன்னம் ஆகிய இருபுறங்களிலும் காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இனங்காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!