இலங்கை

இனங்களிடையே சகவாழ்வினையும் ஒற்றுமையினையும் எற்படுத்துவோம்: மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம்

இலங்கையில் இனங்களிடையே சகாவாழ்வினையும் ஒற்றுமையினையும் எற்படுத்தும் வகையில் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையக மக்களின் வாழ்வுரிமையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் எதிர்வரும் 15,16,17ஆம் திகதிகளில் மாபெரும் மாநாட்டை நடாத்தவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்துள்ளதாக மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வி.கே.சிவபாலன் குருக்கள் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் மற்றும் தேசிய கிறிஸ்தவ மன்றம் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தியது.

மலையக மக்கள் இந்த நாட்டிற்கு வந்து 200வது ஆண்டை குறிக்கும் மாண்புமிக மலையகம் என்னும் எழுச்சியை நினைவூட்டும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் இருப்பினை உறுதிப்படுத்திக்கொள்வோம்,தோழமையினை வெளிப்படுத்துவோம் என்னும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேநேரம் இதன்போது பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் தேசிய கிறிஸ்தவ மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கருத்துகள் தெரிவித்தனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!