வட அமெரிக்கா

அமெரிக்காவை தாக்கிய 4 சூறாவளி – 5 பேர் மரணம் – ஆயிர கணக்கான மின்சார தடை

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைத் தாக்கியுள்ள 4 சூறாவளியில் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களில் ஒரு வயதுக் குழந்தையும் 3 வயதுச் சிறுமியும் அடங்குவர். ஒரு மணிநேரத்தில் 145 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றால் வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன.

460,000க்கும் மேற்பட்டோரின் மின்சாரச் சேவை துண்டிக்கப்பட்டது. மிச்சிகன் மாநிலத்தில் பெய்யும் கனத்த மழையால் விமானச் சேவைகள் தாமதமாகின. வீதிகளும் மூடப்பட்டன.

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாக நிவாரண உதவி சென்றடைய மிச்சிகன் மாநில அதிகாரிகள் அவசரநிலையைப் பிறப்பிக்கவிருக்கின்றனர். அத்தகைய புயல்களின் தீவிரம், புதிய இயல்பாகவே மாறிவிட்டதாக அவர்கள் கூறினர்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!