ஆசியா செய்தி

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழர்

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில், சீன வம்சாவளியைச் சேர்ந்த இருவரை எதிர்த்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சரான, தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கியுள்ளார்.

சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் முதலாம் திகதி நடக்கிறது.

75 வயதான எங் கோக் சோங் ஏற்கனவே போட்டியிடுகிறார். சிங்கப்பூர் அரசு நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணிபுரிந்தார்.

மேலும், 75 வயதான டான் கின் லியோன், அரசுக்கு சொந்தமான இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஓய்வு பெற்றவர். இருவரும் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் இவர்களுக்குப் போட்டியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினமும் களம் இறங்கியுள்ளார். ஆளும் மக்கள் செயல் கட்சியின் மூத்த தலைவர்களில் இவரும் ஒருவர்.

கல்வி மற்றும் நிதி அமைச்சராகவும் சிங்கப்பூர் துணைப் பிரதமராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது மூவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content