இந்தியாவில் உணரப்பட்ட நிலநடுக்கம்

இந்தியாவின் மணிப்பூரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
மணிப்பூரின் உக்ருல் பகுதியில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலை 5.01 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள், பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 20 times, 1 visits today)