ஐரோப்பா

18 வயதானதும் 20,000 யூரோ பணம் வழங்கும் ஐரோப்பிய நாடு

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் இளைஞர்களுக்கு பணம் வழங்கும் புதிய திட்டத்தை தொழில் அமைச்சர் பரிந்துரைத்துள்ளார்.

சமூக ஏற்றத்தாழ்வைக் கையாள 18 வயதானவுடன் 20,000 யூரோ பணம் கொடுக்கும் வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பணத்தைக் கல்வி, பயிற்சி, வர்த்தகம் தொடங்க அவர்கள் பயன்படுத்தலாம். திட்டத்திற்கு 10 பில்லியன் யூரோ செலவாகும் என்றும் செல்வந்தர்களுக்கு வரி விதித்து அந்தப் பணம் ஈட்டப்படும் என்றும் அமைச்சர் Yolanda Díaz கூறினார்.

ஸ்பெயினைச் சேர்ந்த அனைவருக்கும் அந்தத் தொகை 18 வயது முதல் 23 வயது வரை படிப்படியாக வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நடைமுறையில் அந்தத் திட்டம் எப்படிச் செயல்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

நாட்டில் அதைக் காட்டிலும் முக்கியமான பிரச்சினைகள் பல இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறின. ஸ்பெயினில் வரும் 23ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 10 times, 1 visits today)
See also  100க்கும் மேற்பட்ட உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்ய பாதுகாப்பு படையினர்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content