உலகம்

சத்திரசிகிச்சையின்பின் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் பாப்பரசர்

பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ், குடலிறக்க சத்திரசிகிச்சையின் பின்னர் இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

86 வயதான பாப்பரசர் பிரான்சிஸுக்கு குடலிறக்க நோய் காரணமாக, ரோம் நகரிலுள்ள ஜெமேலி வைத்தியசாலையில் கடந்த 7 ஆம் திகதி திகதி சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. 3 மணித்தியாலங்கள் இச்சத்திரசிகிச்சை நீடித்தது.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார். வைத்தியசாலைக்கு வெளியே திரண்டிருந்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

முன்னதாக,  நேற்று, வைத்தியசாலையில் சக்கரநாற்காலி மூலம் நடமாடிய பாப்பரசர் தனக்கு சிகிச்சையளித்து, பராமரித்த மருத்துவர்கள், தாதியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டின் பின்னர், பாப்பரசர் பிரான்சிஸ் வைத்தியசாலையில் தங்கியிருந்தமை இது 3 ஆவது தடவையாகும்.

(Visited 26 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!