ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய சீனா

ஆஸ்திரேலிய பழங்களின் இறக்குமதியை இடைநிறுத்த விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை நீக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏறக்குறைய 02 வருடங்களாக நடைமுறையில் இருந்த அந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டதன் மூலம் ஆஸ்திரேலியாவின் பழ உற்பத்தியாளர்களுக்கு பெருமளவு நிம்மதி கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆஸ்திரேலிய உற்பத்தியாளர்கள் மாம்பழம், ஆரஞ்சு, செர்ரி உள்ளிட்ட பல வகையான பழங்களை சீனாவுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கோவிட் வைரஸின் தோற்றத்தை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா கருத்து தெரிவித்ததால் சீனாவுடனான உறவுகள் பாதிக்கப்பட்டன.

அதன்படி, 2020 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்படும் பல வகையான பழங்கள், மாட்டிறைச்சி, ஒயின், பார்லி மற்றும் கடல் உணவுகள் மீதான இறக்குமதித் தடையை சீனா அறிமுகப்படுத்தியது.

சீனச் சந்தையின் இழப்பு காரணமாக, ஆஸ்திரேலியப் பொருட்களுக்கான இழப்பு ஆண்டுக்கு 20 பில்லியன் டொலர்களுக்கு மேல் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!