உலகம்

காசா பகுதியின் முக்கிய எல்லையை திறக்க நிபந்தனை விதித்த இஸ்ரேல்!

எகிப்துடனான காசா பகுதியின் முக்கிய எல்லைக் கடவையை மீளவும் திறக்க இஸ்ரேல்  ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் காசா பகுதியில் எஞ்சியிருக்கும் கடைசி இஸ்ரேலிய பணயக்கைதியின் உடலை மீட்கும் நடவடிக்கை முடிந்த பின்னரே இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி பணயக்கைதியான மாஸ்டர் சார்ஜென்ட் ரன் க்விலியின் (Master Sgt Ran Gvili) உடலைத் திருப்பி அனுப்ப ஹமாஸ் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேலிய அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளது.

இதற்கிடையே  காசாவின் வட பகுதியில் அவரது எச்சங்களைத் தேடும் பணியைத் தொடங்கியுள்ளதாகவும்  இஸ்ரேலின் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

2024 முதல் ரஃபா கடவை பெரும்பாலும் மூடப்பட்டுள்ளது.  இஸ்ரேல் தனது சமீபத்திய அறிவிப்பில் கடவையை மீண்டும் திறப்பதற்கான காலக்கெடுவை வழங்குவதாகத் தோன்றினாலும், க்விலியை தேடுவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது தெரியவில்லை.

ஆகவே இந்த செயற்திட்டம் காலதாமதமாகலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!