உலகம்

மியன்மார் பொதுத் தேர்தலின் இறுதி சுற்று வாக்குப்பதிவு இன்று!

மியன்மார் பொதுத் தேர்தலில் மூன்றாவது மற்றும் இறுதி சுற்று வாக்குப்பதிவு இன்று (25) நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் இராணுவ ஆதரவு பெற்ற கட்சி மகத்தான வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ இல்லை என்றும், நாட்டின் தற்போதைய இராணுவ ஆட்சியை சட்டப்பூர்வமாக்குவதற்காக நடத்தப்படுகிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதியான  ஆங் சான் சூகி  வெளியேற்றப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த தேர்தலை உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

முதல் இரண்டு சுற்று வாக்குப்பதிவுகளின் முடிவுகளின்படி, இராணுவ ஆதரவு பெற்ற கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு ஒன்றியக் கட்சி முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது.

அங்கு அவர்கள் கீழ் சபையில் 209 இடங்களில் 193 இடங்களையும், மேல் சபையில் 78 இடங்களில் 52 இடங்களையும் வெற்றிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!