உலகம் செய்தி

தாய்லாந்து – கம்போடியா எல்லையில் இந்து சிலைக்கு பதிலாக புத்தர் சிலை அமைப்பு

தாய்லாந்தின்(Thailand) கம்போடியாவுடனான(Cambodia) சர்ச்சைக்குரிய எல்லையில் ஒரு புத்தர் சிலை கட்டப்பட்டுள்ளதாக பாங்காக்(Bnagkok) இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஒரு இந்து தெய்வத்தின் சிலையை இடித்து அகற்றிய அதே இடத்தில் தற்போது புத்தர் சிலை கட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம், தாய்லாந்து மக்கள் அன் மா(An Ma) என்றும் கம்போடியர்கள் அன் செஸ்(An Ses) என்றும் அழைக்கப்படும் எல்லைப் பகுதியில் இந்து தெய்வமான விஷ்ணுவின் உருவம் அழிக்கப்பட்டது.

கம்போடிய அதிகாரிகள் இந்த நடவடிக்கையைக் கண்டித்தனர், அதே நேரத்தில் தாய்லாந்து அந்தப் பகுதியின் மீது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவது அவசியம் என்றும் மத நம்பிக்கைகளை அவமதிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்றும் தெரிவித்திருந்தது.

கம்போடியா மற்றும் தாய்லாந்து இரண்டும் புத்த மத பெரும்பான்மை கொண்ட நாடுகள் ஆகும்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!