அரசியல் இலங்கை செய்தி

ஜனாதிபதியின் உரைக்கு இனவாத முத்திரை குத்தும் விமல்!

நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியே இனவாதத்தை பரப்புகின்றார் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச Wimal Weerawansa குற்றஞ்சாட்டியுள்ளார்.

“ நாட்டில் இன்று இனவாதத்தை பரப்பும் பிரதான நபராக ஜனாதிபதியே இருக்கின்றார்.

வைராக்கியத்தை விதைக்கவே வடக்கிலுள்ள விகாரைக்கு பௌத்தர்கள் வருகின்றனர் என ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.

அதாவது வைராக்கியத்தை விதைக்க வருபவர்களை அடித்து விரட்டுங்கள் என்பதையே இதன்மூலம் மறைமுகமாக அவர் கூற முற்பட்டுள்ளார் எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இனவாதத்தை பரப்புவது யார்? தமிழ் இனவாதியொருவர்கூட இப்படியான கருத்தை வெளியிட்டதில்லை.” – எனவும் விமல் கூறியுள்ளார்.

அதேவேளை, வடக்கில் தையிட்டி விகாரையை மையப்படுத்தி இடம்பெறும் அரசியல் பற்றியே தனது உரைமூலம் ஜனாதிபதி கருத்து கூற முற்பட்டார்.

ஆனால் அது இன்று இலங்கை அரசியல் களத்தில் சில தரப்பினரால் இனவாத கருத்தாக்கப்பட்டுள்ளது.

வடக்கிலுள்ள விகாரைகளுக்கு பௌத்தர்கள் வழிபட செல்லக்கூடாது என்ற கருத்தை ஜனாதிபதி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!