ஜனாதிபதியின் உரைக்கு இனவாத முத்திரை குத்தும் விமல்!
நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியே இனவாதத்தை பரப்புகின்றார் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச Wimal Weerawansa குற்றஞ்சாட்டியுள்ளார்.
“ நாட்டில் இன்று இனவாதத்தை பரப்பும் பிரதான நபராக ஜனாதிபதியே இருக்கின்றார்.
வைராக்கியத்தை விதைக்கவே வடக்கிலுள்ள விகாரைக்கு பௌத்தர்கள் வருகின்றனர் என ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.
அதாவது வைராக்கியத்தை விதைக்க வருபவர்களை அடித்து விரட்டுங்கள் என்பதையே இதன்மூலம் மறைமுகமாக அவர் கூற முற்பட்டுள்ளார் எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இனவாதத்தை பரப்புவது யார்? தமிழ் இனவாதியொருவர்கூட இப்படியான கருத்தை வெளியிட்டதில்லை.” – எனவும் விமல் கூறியுள்ளார்.
அதேவேளை, வடக்கில் தையிட்டி விகாரையை மையப்படுத்தி இடம்பெறும் அரசியல் பற்றியே தனது உரைமூலம் ஜனாதிபதி கருத்து கூற முற்பட்டார்.
ஆனால் அது இன்று இலங்கை அரசியல் களத்தில் சில தரப்பினரால் இனவாத கருத்தாக்கப்பட்டுள்ளது.
வடக்கிலுள்ள விகாரைகளுக்கு பௌத்தர்கள் வழிபட செல்லக்கூடாது என்ற கருத்தை ஜனாதிபதி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





