அனல் கக்கும் தமிழக அரசியல் களம்: நாளை நேரில் களமிறங்கும் மோடி!
பிரதமர் மோடி நாளை (23) தமிழகம் வருகின்றார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே மோடிவருகின்றார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஓர் அங்கமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் அனல் கக்குகின்றது.
தமிழகத்தில் பிரதான கட்சிகளுள் ஒன்றான அ.தி.மு.க., பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து களமிறங்குகின்றது.
இந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பன கைக்கோத்துள்ளன.
கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையிலேயே மதுராந்தகத்தில் நாளை 23-ம் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றுவார். கூட்டணி தலைவர்களும் உரையாற்றவுள்ளனர்.
மாலை 5 மணிக்கு பொதுக் கூட்டம் முடிந்த பின், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி மீண்டும் டெல்லி செல்வார்.





