இலங்கை செய்தி

மாதச் சம்பளம் 6 இலட்சத்திற்கும் அதிகம் ; 25 முதல் 45 வயதுடையவர்களுக்கு அரிய வாய்ப்பு

இலங்கை மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டில் 1,000 இலங்கையர்களை வீட்டுத் தாதியர் பணிகளுக்காக இஸ்ரேலுக்கு அனுப்ப இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான தகுதிகளாக, 25 முதல் 45 வயதுக்குட்பட்ட, க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரர்கள் NVQ III தாதியர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தது 11 மாத கால தாதியர் அனுபவத்தைக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன், ஆங்கில மொழியில் போதிய தேர்ச்சியும் அவசியமாகும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் விசா வழங்கப்படுவதுடன், மாதம் 6 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான ஊதியம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

2026-ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 107 நிபுணர்கள் ஏற்கனவே இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக மட்டுமே மேற்கொள்ளப்படுவதால், கடவுச்சீட்டு அல்லது பணத்தை வேறு எந்தவொரு தனிநபர் அல்லது தனியார் நிறுவனங்களிடம் வழங்கி ஏமாற வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!