ஐரோப்பா

NHS அறக்கட்டளையின் காலதாமதம் : அநியாயமாக பறிபோன உயிர்!

பிரித்தானியாவில் நீண்ட நேர காத்திருப்பிற்கு பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  நோயாளி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து NHS அறக்கட்டளை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தின் சுகாதார ஆம்புட்ஸ்மேன் (ombudsman -குறைக்கேள் அதிகாரி) குறித்த நோயாளியின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோருமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2023 இல் இறுதியில் கருப்பை புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்ட பெண் ஒருவர், நீண்ட நேர காத்திருப்பு காரணமாக கீமோதெரபி (chemotherapy) சிகிச்சையை பெறுவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.

இதன்காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பாராளுமன்ற மற்றும் சுகாதார சேவை குறைக்கேள் அதிகாரி அறக்கட்டளையின் தோல்விகள் நோயாளிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அறிவித்துள்ளது.

காத்திருப்பு நேரங்கள் மற்றும் பிற மேம்பாடுகளை மறுபரிசீலனை செய்ய பரிந்துரைத்துள்ளதுடன், மேற்படி நோயாளியின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோருமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!