இலங்கை செய்தி

பொதுப் போக்குவரத்து உரிமம் கட்டாயம் – போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

எதிர்காலத்தில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து ஓட்டுநர்களுக்கும் தனியான பொதுப் போக்குவரத்து உரிமம் கட்டாயமாக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்காக சிறப்பான பயிற்சி நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கான பாடநெறி உள்ளடக்கம் ஏற்கனவே தயாராகிவிட்டதாகவும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பயணிகள் பேருந்துகள், பாடசாலை வேன்கள், அலுவலகப் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் டாக்சிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் இந்த பொதுப் போக்குவரத்து உரிமம் அவசியமாக இருக்கும் என அமைச்சர் கூறினார்.

தற்போது கனரக வாகன உரிமம் 21 வயதில் வழங்கப்படுகின்ற போதும், பொதுப் போக்குவரத்து உரிமம் 25 வயதில் வழங்கப்பட வேண்டும் என்றும், பாடசாலை வேன்கள் மற்றும் பேருந்துகளை ஓட்ட பொதுப் போக்குவரத்து உரிமம் பெற 30 வயதை அடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த புதிய விதிமுறையை அமல்படுத்துவதற்கு முன், ஓட்டுநர்களுக்கு ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் வரை சலுகை காலம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், பொதுப் போக்குவரத்து உரிமத்திற்கான இரண்டு நாள் பயிற்சியை இதுவரை சுமார் 6,000 ஓட்டுநர்கள் நிறைவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!