அரசியல் இலங்கை செய்தி

புலி புராணத்தோடு புத்தாண்டில் அரசியல் விமர்சனத்தை ஆரம்பித்தது மொட்டு கட்சி!

” 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவரின் மகன்தான் நாமல் ராஜபக்ச. எனவே, சவால்களை கண்டு ஓடி ஒளியும் நபர் அவர் அல்லர்.”

– இவ்வாறுமுன்னாள் இராஜாங்க அமைச்சர் சானக வக்கும்புர Chanaka Wakumbura தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP) தலைமையகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கிராமிய மட்டத்திலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மாகாணசபைத் தேர்தல் நடக்கும் பட்சத்தில் எமது கட்சியின் பலத்தை காண முடியும்.

முடிந்தால் கூடிய விரைவில் தேர்தலை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம். நாமல் ராஜபக்ச தலைமையில் அத்தேர்தலில் நாம் வெல்வோம்.

30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச. அவர் துணிகரமாகவே அன்று முடிவுகளை எடுத்தார். எனவே, அவரின் மகனான நாமல் ராஜபக்சவுக்கும் சவால்களுக்கு முகங்கொடுப்பதென்பது பிரச்சினைக்குரிய விடயம் அல்ல.

நாட்டை வழிநடத்துவதற்குரிய வேலைத்திட்டம் எம் வசம் உள்ளது. தேவையான நேரத்தில் அது வெளிப்படுத்தப்படும் ” – என்றார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சானக வக்கும்புர.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!