இலங்கை

கொழும்பில் பழைய கட்டிடங்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்!

கொழும்பில் புராதன கட்டிடங்களின் தொன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க்படவுள்ளது.

மேலும் அவற்றில் முதலீட்டு வாய்ப்புகளை வழங்கவும் அவற்றை நவீனப்படுத்த நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி அமைச்சு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜோர்ஜியாவிலுள்ள இலங்கை தூதரகம் உள்ளிட்ட ஜோர்ஜிய முதலீட்டாளர்கள் குழு தெரிவித்துள்ளனர்.

குறித்த கலந்துரையாடல் நேற்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் இடம்பெற்றது.

கொழும்பு “கஃபூர் கட்டிடம்” மற்றும் கொழும்பு “எய்ட்டி கிளப்” கட்டிடம் போன்ற பல இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கட்டடங்களின் வரலாற்று தொன்மைக்கு சேதம் ஏற்படாத வகையில் நவீனப்படுத்தப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுகிறார்.

நாட்டில் உள்ள பெரும்பாலான புராதன கட்டிடங்கள் முறையான பராமரிப்பு இன்மையால் பாழடைந்து வருவதாகவும் அவற்றை நவீனப்படுத்தி முதலீடுகளுக்கு பயன்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு வருமானம் ஈட்ட முடியும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!