அரசியல் இலங்கை செய்தி

இலங்கையின் சுற்றுலாத் துறையையும் தாக்கியதா டித்வா புயல்?

பேரிடருக்கு மத்தியிலும் நாம் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கவில்லை. சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்குரிய வேலைத்திட்டம் தொடர்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 22 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

“நெருக்கடியான காலகட்டத்திலும் நாம் சுற்றுலாத்துறையை கைவிடவில்லை. சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரும் வேலைத்திட்டம் முறையாக முன்னெடுக்கப்பட்டது.

டிசம்பர் மாதத்தில் முதல் 10 நாட்களுக்குள் 93 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 22 லட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டிலேயே இலங்கைக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். பேரிடர் நிலையால் அந்த இலக்கை இவ்வருடம் அடைய முடியாமல்போனது.

எனினும், சுற்றுலாத்துறை வருமானம் தக்கவைக்கப்பட்டது. இலங்கைக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகளை வரவைப்பதற்குரிய வேலைத்திட்டம் தொடரும்” என வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!