உலகம்

05 நாடுகள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் ஐந்து நாடுகளில் வசிக்கும் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய அறிவிப்பின்படி, புர்கினா பாசோ (Burkina Faso), மாலி (Mali), நைஜர் (Niger), தெற்கு சூடான் ( South Sudan)  மற்றும் சிரியாவைச் (Syria) சேர்ந்தவர்கள் மற்றும் பாலஸ்தீன ஆணையத்தின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மீது முழு நுழைவு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

இந்த கட்டுப்பாடுகள் “அமெரிக்காவின் பாதுகாப்பை” பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

மேற்படி ட்ரம்பின் உத்தரவு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

முன்னதாக லாவோஸ் (Laos)) மற்றும் சியரா லியோன் (Sierra Leone) ஆகிய நாடுகள் பகுதியளவிலான கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அவை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!