அரசியல் இலங்கை

பேரிடரால் மொத்த தேசிய உற்பத்தியில் 3 சதவீத இழப்பு!

டித்வா புயலால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு 4 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.

இவர் பொருளாதார நிபுணர் என்பதுடன், நிழல் நிதி அமைச்சராகவும் கருதப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“ உலக வங்கியின் மதிப்பீட்டு அறிக்கை வெளியான பின்பே பேரிடர் இழப்பு பற்றி சரியான தகவலை குறிப்பிடலாம்.

எனினும், 3 முதல் 4 பில்லியன் டொலர்வரை இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பது எனது தனிப்பட்ட கணிப்பாகும்.

மொத்த தேசிய உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு கணித்தால் இழப்பு 3 சதவீதமாக அமையும்.” எனவும் கலாநிதி ஹர்ச டி சில்வா சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, பேரிடரால் 6 பில்லியன் டொலர்வரை இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என அரசாங்கம் கருத்து வெளியிட்டுள்ளமை தெரிந்ததே.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!