ஆப்பிள் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் பணியமர்த்தப்படும் இந்தியர்!
ஆப்பிளின் செயற்கை நுண்ணறிவு மற்றும் AI உத்திக்கான மூத்த துணைத் தலைவரான ஜோன் கியானாண்ட்ரியா (John Giannandrea) பதவி விலகியுள்ளார்.
குறித்த பதவிக்கு புதிய தலைவராக மைக்ரோசாப்ட் AI நிர்வாகி அமர் சுப்பிரமணியா (Amar Subramanya) நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு தசாப்தங்களாக இந்த துறையில் பணியாற்றிய அவர் AI, ஜெமினியின் வளர்ச்சியை மேற்பார்வையிட்டுள்ளார்.
ஜான் கியானாண்ட்ரியா (John Giannandrea) அடுத்த ஆண்டு பதவி விலகும் வரை ஆப்பிளின் ஆலோசகராகத் தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆப்பிளின் தலைமை நிர்வாகி டிம் குக் (Tim Cook), எங்கள் AI பணிகளை உருவாக்குவதிலும் முன்னேற்றுவதிலும் ஜோன் ஆற்றிய பங்கிற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம், ஆப்பிள் எங்கள் பயனர்களின் வாழ்க்கையை தொடர்ந்து புதுமைப்படுத்தவும் வளப்படுத்தவும் உதவுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுப்பிரமணியா தனது அசாதாரண AI நிபுணத்துவத்தை ஆப்பிள் நிறுவனத்திற்கு கொண்டு வருவார் எனவும் டிம் குக் (Tim Cook) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் பல ஆண்டுகளாக AI துறையில் தனது போட்டியாளர்களை விட பின்தங்கியுள்ளதாக விமர்சிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





