ஆசியா ஆஸ்திரேலியா இந்தியா இலங்கை செய்தி

இலங்கைக்கு உதவிகளை வாரி வழங்கும் உலக நாடுகள்

அவுஸ்திரேலியா

டித்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உடனடி அவசர நிவாரணமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒருமில்லியன் அவுஸ்திரேலிய டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணமாக பயன்படுத்தப்படும் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

சீனா

இதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை சீனாவும் வழங்கியுள்ளது.

இந்த நிதியை சீன செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு அவசர நிவாரண உதவியாக வழங்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தமது எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளது.

ஜப்பான் 

மேலும், இலங்கையில் பாதிப்புகளுக்குப் பதிலளிக்க சர்வதேச அவசர உதவிக் குழுவை ஜப்பான் அனுப்புகிறது.

இலங்கை ஏற்பட்ட டித்வா சூறாவளி காரணமாக பரவலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து, அவசர தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜப்பான் அரசு ஒரு சர்வதேச அவசர உதவிக் குழு மற்றும் மருத்துவக் குழுவை அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளது.

இந்தியா

மேலும், இந்தியாவும் இரண்டாம் கட்டமாக இலங்கைக்கு அவசர உதவியை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!