இலங்கை செய்தி

புலம்பெயர் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் நிவாரண நிதி வழங்க அரசாங்கம் அழைப்பு

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு உதவ, புலம்பெயர் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் நிதி உதவிகளை வழங்கலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு (President’s Media Division – PMD) இன்று வெளியிட்டுள்ளது.

நன்கொடைக்கான வங்கிக் கணக்குகள்
நன்கொடைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, இரண்டு பிரத்தியேக வங்கிக் கணக்குகள் நிறுவப்பட்டுள்ளன:

உள்ளூர் நாணயத்தில் வழங்கப்படும் பங்களிப்புகளை ஏற்றுக்கொள்வதற்காக ஒரு கணக்கும்
வெளிநாட்டு நாணயத்தில் (அமெரிக்க டாலர்) வழங்கப்படும் பங்களிப்புகளை ஏற்றுக்கொள்வதற்காக ஒரு தனிக் கணக்கும் நிறுவப்பட்டுள்ளது என்றும்.
இவ் அறிக்கையானது

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், வெளிநாடுகளில் கடமையாற்றும் இலங்கைத் தூதுவர்கள் ஆகியோருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நடத்திய கலந்துரையாடலின் போதே இந்தத் தகவல்கள் பகிரப்பட்டன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

hqxd1

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!