சீரற்ற காலநிலை – மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு
நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 877 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் எழுவர் காயமடைந்துள்ளனர்.
மண்சரிவு , மரம் முறிவு மற்றும் வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களாலேயே உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
4 வீடுகள் முழுமையாகவும், 250 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
சீரற்ற காலநிலையால் 33 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேர் மூன்று தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, அடுத்து சில நாட்களுக்கு சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





