உலகம் செய்தி

வெனிசுலா ஊடாக பறப்பதில் ஆபத்து – சேவைகளை இரத்து செய்த விமான நிறுவனங்கள்!

வெனிசுலாவில் அதிகரித்து வரும் இராணுவ பதற்றம் காரணமாக உலகின் பல சர்வதேச விமான நிறுவனங்கள் அந்நாட்டிற்கான விமான சேவைகளை நேற்று முதல் இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெனிசுலாவில் உள்ள விமான நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் மரிசெலா டி லோயிசா (Marisela de Loaiza) அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

TAP, LATAM, அவியான்கா (Avianca), ஐபீரியா (Iberia), கோல் (Gol) மற்றும் கரீபியன் (Caribbean) உள்ளிட்ட 06 விமான நிறுவனங்கள் சேவைகளை காலவரையறையின்றி  நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் துருக்கிய (Turkish) விமான நிறுவனங்கள் நவம்பர் 24 முதல் 28 வரை விமானங்களை நிறுத்தி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது டிரம்ப் நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வருவதால் அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் அந்நாட்டின் வான்வெளியை பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் மேற்படி அறிவிப்பு வந்துள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!