உலகம்

கம்போடியாவில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்து – 13 பேர் பலி!

கம்போடியாவில் பயணிகள் பேருந்து ஒன்று நேற்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 13 பயணிகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சீம் ரீப்பில் (Siem Reap) இருந்து தலைநகர் புனோம் பென்னுக்கு  (Phnom Penh) பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

இதில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களின் உடல்கள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள மருத்துவமனையில், அவர்களது உறவினர்கள் எடுத்துச் செல்லும் வரை வைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பேருந்து புறப்படும்போது  சாரதி மயக்கமடைந்த நிலையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் அவரும் இருக்கிறாரா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 2 times, 3 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!