இலங்கையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகும் மருத்துவவர்கள்
இலங்கையில் நவம்பர் 17ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் மருத்துவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் வழங்கத் தவறியதால், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று அதன் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இந்த முடிவு இடம்பெற்றுள்ளது.
அதற்கமைய, சுகாதார நிலையங்களில், மருத்துவமனைகளுக்கு வெளியே எடுத்துச் செல்ல வேண்டிய மருந்துகளுக்கான மருந்துச் சீட்டுகளை வழங்குவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்த்தபடி அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகள் வழங்கத் தவறியதால், இது தொடர்பாக எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துச் சிறப்பு மருத்துவர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகச் சிறப்பு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.





