உலகம் செய்தி

போதைப்பொருள் படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் – ஐ.நா மனித உரிமைகள் தலைவர் கண்டனம்

தென் அமெரிக்காவிலிருந்து(South America) சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்டு சென்றதாகக் கூறப்படும் கரீபியன் கடல்(Caribbean Sea) மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில்(eastern Pacific Ocean) படகுகள் மீது அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்(UNHCR) தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தத் தாக்குதல்கள் “ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்றும் அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் தலைவர் வோல்கர் டர்க்(Volker Turk) குறிப்பிட்டுள்ளார்.

மேலும், படகுகளை இடைமறித்தல் மற்றும் சந்தேக நபர்களை தடுத்து வைத்தல், தேவைப்பட்டால், தனிநபர்கள் மீது வழக்குத் தொடுத்தல் உள்ளிட்ட சட்ட அமலாக்க முறைகளைப் பயன்படுத்துமாறு அவர் அமெரிக்காவிடம் அழைப்பு விடுத்துள்ளார்.

செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து போதைப்பொருள் படகுகள் மீது அமெரிக்கா இதுவரை 15தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இதன் மூலம் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி

பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் படகு மீதான அமெரிக்க தாக்குதலில் 4 பேர் மரணம்

(Visited 4 times, 2 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி