இலங்கை பாடசாலை மாணவர்களைப் பாதுகாக்க பிரதி காவல்துறை மா அதிபர் நடவடிக்கை
இலங்கையில் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் ஜயந்த பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார்.
பாடசாலை முடிந்த பின்னர் மாணவர்கள், யாருடன் பழகுகிறார்கள்?, எங்கு குழுவாக நிற்கிறார்கள் என்று ஆராய்வதற்கு சிவில் உடையில் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, நிலையங்கள், பாடசாலை விட்டுச் செல்லும்போது பேருந்து, வியாபாரத் தளங்கள் போன்ற இடங்களில் போதைப்பொருள் பாவனைப் போன்ற சம்பவங்களைக் கண்டால் அறிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
071 859 2683 என்ற தனது தொலைபேசி இலக்கத்துக்கு இது தொடர்பில் தகவல் வழங்குமாறு பிரதிப் காவல்துறை மா அதிபர் ஜயந்த பத்மினி வீரசூரிய பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.





