அயர்லாந்தில் (Ireland) புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிரான போராட்டம் – 23 பேர் கைது!

அயர்லாந்தின் (Ireland) தலைநகரான டப்ளினில் (Dublin) புகலிட விடுதி அருகே இடம்பெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதில் குறைந்தது 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களுடனான மோதல்களில் காயமடைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 வயதுடைய சிறுமி ஒருவர் புகலிடக் கோரிக்கையாளரால் துஷ்பிரயோகம் செய்யப்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகிறது. சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய இளைஞர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிரான போராட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக சிட்டிவெஸ்ட் ஹோட்டலில் (Citywest Hotel ) மூன்றாவது நாளாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.