உலகம் செய்தி

மடகாஸ்கரின் ஜனாதிபதியாக பதவியேற்ற ராணுவ தளபதி மைக்கேல் ராண்ட்ரியானிரினா (Michel Randrianirina)

இந்தியப் பெருங்கடல் தேசத்தை இராணுவம் கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு, மடகாஸ்கரின் புதிய ஜனாதிபதியாக CAPSAT ராணுவ தளபதி மைக்கேல் ராண்ட்ரியானிரினா (Michel Randrianirina) பதவியேற்றுள்ளார்.

தலைநகர் அன்டனனரிவோவில் (Antananarivo) உள்ள அரசியலமைப்பு நீதிமன்றத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.

தனது முதல் உரையில், முன்னாள் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினாவை (Andry Rajoelina) நாட்டை விட்டு வெளியேறத் தூண்டிய மற்றும் அவரது பதவி நீக்கத்திற்கு வழிவகுத்த இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், “நாட்டின் நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்புகளை முழுமையாக சீர்திருத்துவதே எங்கள் முக்கிய நோக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மடகாஸ்கரில் கடந்த வாரம் வன்முறையாக மாறிய போராட்டங்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா அக்டோபர் 13ம் திகதி நாட்டை விட்டு வெளியேறினார்.

தொடர்புடைய செய்தி

மடகாஸ்காரில் (Madagascar) தீவிரமடைந்த போராட்டம் – நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி!

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி