இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த காவல்துறை – சிக்கிய மூவர்

இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கிய ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த காவல்துறை கான்ஸ்டபிள் அளுத்கம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியாகும.
அத்துடன் இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை கான்ஸ்டபிள், கான்ஸ்டபிளின் மனைவியின் தாய் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரென கருதப்படும் “மாத்தறை ஷான்” என்பவரின் நெருங்கிய சகா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் காவல்துறை உத்தியோகத்தர் மற்றும் ஏனைய இருவர், இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்து உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
(Visited 13 times, 1 visits today)