காசா கடவைகளை திறக்க கோரிக்கை விடுத்த ஐ.நா மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம்
போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிக்குள் மிகவும் தேவைப்படும் உதவியை அனுமதிக்க காசாவிற்குள் உள்ள அனைத்து கடவைகளையும் திறக்க ஐக்கிய நாடுகள் சபை (United Nations) மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of the Red Cross) அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட காசா போர்நிறுத்தத்தை தொடர்ந்து பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை உதவிகளால் நிரப்ப கடவைகளைத் திறக்க வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று, ஐக்கிய நாடுகள் சபை காசாவில் பஞ்சத்தை அறிவித்தது, இது மத்திய கிழக்கில் முதல் பஞ்சமாகும், நிபுணர்கள் 500,000 மக்கள் “பேரழிவு” அச்சுறுத்தலை எதிர்கொண்டதாக எச்சரித்தனர்.
குறித்த திகதியில் இருந்து தற்போதைய போர்நிறுத்தம் வரை காசாவிற்குள் முறையான உதவிகள் ஏதும் வழங்கப்படவில்லை. போரில் உயிரிழந்தவர்களை தாண்டி உணவு பற்றாக்குறையால் பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்.
இந்நிலையில், ஐ.நா. 190,000 மெட்ரிக் டன் உதவிகளை காசாவிற்கு அனுப்ப தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.





