ஆசியா செய்தி

ஆப்கானிஸ்தான் முழுவதும் முடங்கிய தொலைத்தொடர்பு சேவைகள்!

ஆப்கானிஸ்தானில் நாடு தழுவிய ரீதியில் தொலைத் தொடர்பு சேவைகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்நாட்டில் அரசமைத்துள்ள தலிபான்கள் ஃபைபர்-ஆப்டிக் இணைய இணைப்புகளைத் துண்டிக்கத் தொடங்கிய சில வாரங்களுக்குப் பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நாடு தற்போது “முழுமையான இணைய முடக்கத்தை” சந்தித்து வருவதாக, இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் தெரிவித்துள்ளது.

சர்வதேச செய்தி நிறுவனங்கள் தலைநகர் காபூலில் உள்ள அலுவலகங்களுடனான தொடர்பை இழந்துவிட்டதாகக் கூறுகின்றன. ஆப்கானிஸ்தான் முழுவதும் மொபைல் இணையம் மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான உறுதிப்படுத்தப்பட்ட காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும்  2021 இல் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து, தாலிபான்கள் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் விளக்கத்தின்படி ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி