உலகம்

காங்கோவில் IS ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களால் தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 21 பேர் பலி

காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கொமாண்டா பகுதியில் அமைந்துள்ள ஒரு தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென தேவாலயத்திற்குள் ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள், அங்கு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தினர்.

இதனால் அங்கிருந்த மக்கள் பயத்தில் சிதறியடித்து ஓடத் தொடங்கினர். அவ்வாறு ஓடியவர்களை துரத்திச் சென்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். மேலும் தேவாலயத்திற்கு அருகே இருந்த சில வீடுகள் மற்றும் கடைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் அரசு ஆதரவு பெற்ற மத அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

(Visited 2 times, 2 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
Skip to content