விளையாட்டு

2 வீரர்கள் காயம் – இந்திய அணியில் இணையும் அன்ஷுல் காம்போஜ்

இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து வரும் இந்​திய கிரிக்​கெட் அணி​யில் 2 வீரர்​கள் காயமடைந்​துள்​ள​தால் வேகப்​பந்து வீச்​சாளர் அன்​ஷுல் காம்​போஜ் இணை​ய​வுள்​ளார்.

இந்​திய கிரிக்​கெட் அணி இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 5 ஆட்​டங்​கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. இதில் முதலா​வது மற்​றும் 3-வது டெஸ்ட் போட்​டி​யில் இங்​கிலாந்​தும், 2-வது டெஸ்ட் போட்​டி​யில் இந்​தி​யா​வும் வெற்றி பெற்​றன.

இதைத் தொடர்ந்து இங்​கிலாந்து அணி 2-1 என்ற கணக்​கில் தொடரில் முன்​னிலை​யில் இருக்​கிறது. இவ்​விரு அணி​கள் இடையி​லான 4-வது டெஸ்ட் போட்டி மான்​செஸ்​டரில் உள்ள ஓல்டு டிரா​போர்ட் மைதானத்​தில் வரும் 23-ம் தேதி தொடங்​கு​கிறது.

இந்​நிலை​யில் இங்​கிலாந்து சென்​றுள்ள இந்​திய அணி​யில் இடம்​பெற்​றுள்ள வேகப்​பந்து வீச்​சாளர்​களான ஆகாஷ் தீப், அர்​ஷ்தீப் சிங் ஆகிய இரு​வரும் காயம் அடைந்​துள்​ளனர். ஆகாஷ் தீப் இடுப்பு வலி​யால் அவதிப்​பட்டு வரு​கிறார்.

இதனால் அவர், 4-வது போட்​டிக்கு முன்​ன​தாக முழு​வதும் குணமடை​வாரா என்​பது தெரிய​வில்​லை. அவரது உடல்​நிலையை இந்​திய அணி நிர்​வாகம் கவனித்து வரு​கிறது. அதே​நேரத்​தில் அணி​யின் மற்​றொரு வேகப்​பந்து வீச்​சாள​ரான அர்​ஷ்தீப் சிங் பயிற்சி செய்து கொண்​டிருந்​த​போது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரண​மாக இரு​வரும் 4-வது போட்​டி​யில் விளை​யாட முடி​யாத நிலை உரு​வாகி உள்​ளது.

எனவே, முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக இந்​திய தேர்​வுக்​குழு​வினர் அன்​ஷுல் காம்​போஜை மாற்று வீர​ராக அணி​யில் சேர்த்​துள்​ளனர். இவர் 4-வது போட்​டிக்கு முன்​ன​தாக இங்​கிலாந்து சென்று இந்​திய அணி​யுடன் இணை​வார் என்று கூறப்​படு​கிறது.அன்​ஷுல் காம்​போஜ் சமீபத்​தில் இங்​கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதி​ராக நடை​பெற்ற 2 அதி​காரபூர்​வ​மற்ற டெஸ்ட் போட்​டிகளில் இந்​தியா ஏ அணிக்​காக விளை​யாடி இருந்​தார். அப்​போது 5 விக்​கெட்​களை வீழ்த்தி இருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
Skip to content