சூரியனுக்கு மிக அருகில் பறந்த விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியானது
 
																																		நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் (Parker Solar Probe) விண்கலம் சூரியனை மிக அருகில் படம் பிடித்து, இதுவரை எடுக்கப்பட்ட மிக விரிவான மற்றும் கூர்மையான படங்களை வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பரில், இந்த விண்கலம் சூரியனிலிருந்து மட்டும் 6.2 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சென்றது. இதுவரை எந்தவொரு மனிதன் உருவாக்கிய விண்கலமும் இவ்வளவு அருகில் சூரியனை அணுகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயணத்தின் போது, பார்க்கர் சோலார் ப்ரோப் எடுத்து அனுப்பிய படங்களில் மூன்று கொரோனல் மாஸ் எஜெக்ஷன்கள் (CME) தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த CME கள் சூரியனில் இருந்து வெளியாகும் பெரிய அளவிலான பிளாஸ்மா மற்றும் காந்த கள உமிழ்வுகள் ஆகும்.
இந்த தரவுகள், விண்வெளி வானிலை பற்றிய நுண்ணறிவுகளை வழங்குவதோடு, பூமியில் ஏற்படக்கூடிய மின்சார தடை, செயற்கைகோள் சேதம், விமான சேவைகள் பாதிப்பு போன்ற தாக்கங்களை முன்னறிவிப்பதற்கும் பயன்படும் என நாசா தெரிவித்துள்ளது.
பார்க்கர் சோலார் ப்ரோப் திட்டத்தின் தலைமை விஞ்ஞானி நூர் ரவாஃபி, “இந்த புதிய படங்கள் மற்றும் தகவல்கள், சூரியனின் நடத்தை மற்றும் அதன் தாக்கங்களை இன்னும் தீவிரமாகப் புரிந்து கொள்வதற்கான வழியைத் திறக்கின்றன,” என கூறினார்.
பார்க்கர் சோலார் ப்ரோப் திட்டம் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சூரியனை நெருங்கிப் பறக்கும் இந்த மாபெரும் முயற்சி, சூரியக் corona (வளைகுடா) பற்றிய ஆய்வுகளில் சிகரத்தைத் தொட்டுள்ளது.

 
        



 
                         
                            
