இலங்கை

இலங்கையில் குழந்தைகளை பாதிக்கும் நோய் தொற்று – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்கள் குழந்தைகளிடையே பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உணவு உட்கொள்ளும் முறைமையே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவின் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் மோனிகா விஜேரத்ன தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இதேவேளை நாடு முழுவதும் அதிகரித்துவரும் குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக சுகாதார நிபுணர் தினுஷா பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையானது குடும்ப நல்வாழ்வு மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் எச்சரித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு மாத்திரம் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட 12,198 குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டது. இந்தநிலையில் உதவி கோருபவர்களில் 91 சதவீதமானவர்கள் பெண்கள் எனவும், 9 சதவீதமானவர்கள் மட்டுமே ஆண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!