இலங்கை

இலங்கை – 14 வயது சிறுமி கர்ப்பம் ;சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹப்புத்தளை, கெல்பன் தோட்டத்தை சேர்ந்த சிறுமி, வயிற்று வலி காரணமாக தியத்தலாவ வைத்தியசாலையில் சனிக்கிழமை (31) இரவு அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாரால் சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், கெல்பன் தோட்டத்தை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!